Saturday 28 March 2015

என்னை கவர்ந்த பாடல் வரிகள் - திருடாதே பாப்பா திருடாதே..!

பட்டுகோட்டையார் எப்போதும் சமூக அக்கறை உள்ள பாடல்களை நிதர்சனத்தோடு எழுதுவதுபவர். அவர் பாடல்களில் எப்போதும் சமூகத்தின் மீது அக்கறையும் சமூக அவலங்கள் மீது சாடலும் இருக்கும். எனக்கு பட்டுக்கோட்டையார் அவர்களின் பாடல்கள் அனைத்துமே பிடித்த பாடல்கள்தான். இந்த பாடலும் அந்த வகையை சேர்ந்த சமூக சிந்தனையுள்ள பாடல்தான்! 

///வறுமை நிலைக்கு பயந்துவிடாதே, திறமை இருக்கு மறந்துவிடாதே/// , ///உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா, கெடுக்குற நோக்கம் வளராது, மனம் கீழும் மேலும் புரளாது/// போன்ற வரிகள் அனைத்துமே மனதை புயலாக்கி விட்டு நம்மை உழைப்பாளி ஆக்கி விடும் வரிகள்!! பட்டுக்கோட்டையார் என் மனதில் கோட்டை கட்டியவர்.

சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் 1961-ல் வெளிவந்த 'திருடாதே' என்ற படத்தில் இடம் பெற்ற ''திருடாதே... பாப்பா திருடாதே...'' என்ற பாடல்தான் இது. மலைக்கள்ளன், நாடோடி மன்னன் படங்களின் வெற்றிக் கூட்டணியான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,எம்.ஜி.ஆர்,எஸ். எம். சுப்பையா நாயுடு கூட்டணிதான் இப்படத்திலும் இடம்பெற்றது. 

இப்படத்தின் பாடல்களை எல்லாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்கள். பாடியவர் நமது டி.எம்.எஸ். இப்படத்தை இயக்கியவர். ப. நீலகண்டன். இப்படத்தில் ஒரு சிறப்பு உண்டு. கவிஞர் கண்ணதாசன் இப்படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். பாடல் ஏதும் எழுதவில்லை என்று நினைக்கிறேன்...

பட்டுக் கோட்டையாரின் இப்பாடல் வரிகள் அத்தனையும் வைரம்... 



திரைப்படம்: திருடாதே (1961) 
இசை: S.M. சுப்பைய்யா நாயுடு
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

திருடாதே... பாப்பா திருடாதே... 
திருடாதே... பாப்பா திருடாதே...
திருடாதே... பாப்பா திருடாதே...

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே... பாப்பா திருடாதே...

சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ

திருடாதே... பாப்பா திருடாதே...

திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது

திருடாதே... பாப்பா திருடாதே...

கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது
கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது

இனி எடுக்குற அவசியம் இருக்காது

இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது...

உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா…
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா…
கெடுக்குற நோக்கம் வளராது
மனம் கீழும் மேலும் புரளாது

உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா
உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது

திருடாதே... பாப்பா திருடாதே...

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...
திறமை இருக்கு மறந்துவிடாதே

திருடாதே... பாப்பா திருடாதே...

No comments: