Thursday 26 March 2015

மணிமுத்தாறு கண்ட மாவீரன் கே.டி கோசல்ராம்

1930 இல் தம்முடைய 15 ஆம் வயதில் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். இளவயதில் வெள்ளையரை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். இவருடைய சிறுவயதினை மனதில் கொண்டு ஒவ்வொரு முறையும் ஒருவாரம் வரை சப்ஜெயிலில் வைத்து அடித்து விரட்டி விட்டனர்.
1942 போராட்டத்தில் கலெக்டர் ஹெச்மாடியால் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உப்புச்சத்தியாகிரக வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் தண்டிக்கப்பட்டார். பின் குரும்பூர் சதிவழக்கில் 1வது எதிராளியாகச் சேர்க்கப்பட்டு 21 மாதங்கள் சப் ஜெயிலில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். சாக்குச் சட்டையை அணியச் செய்து இரவும் பகலும் கை விலக்கு மாட்டி தனி அறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சாட்சியமில்லை என்று போலீசாரால் வாபஸ் பெறப்பட்டது. உடனே பாதுகாப்புக் கைதியாகக் கைது செய்யப்பட்டு தஞ்சை வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். 1945 இல் விடுதலைப் பெற்றார்.
ஆலயப்பரவேசம் : தீண்டாமையை எதிர்த்து ஆலயப் பிரவேசச் சட்டம் வரும் முன்பாகத் திருச்செந்தூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்றார்.
அமைப்பாளர் : உப்புத் தொழிலாளர் சங்கம் நாசரேத்தில் கூட்டுறவு நூற்பு ஆலை சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு உதவித் தொகை கொடுக்க வேண்டுமென 1966 டிசம்பர் மாதம் சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வந்து வெற்றி கண்டார்.
மணிமுத்தாறு அணை கட்டுவதங்கு நிதி இல்லை கே.டி.கே. வசூலித்து தந்தால் திட்டம் என்று கைவிரித்த மராமத்து இலாகா அமைச்சர் திரு.பக்தவச்சலம் கூற்றைச் சவாலாக ஏற்றுக் கொண்டு ஒரே வாரத்தில் ஒன்றேகால் கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்து சாதனை செய்தார்.

No comments: