Saturday 7 March 2015

சிவகாசி பூணூல் நாடார்கள்

1890 ஆம் ஆண்டு முதல் சிவகாசி பகுதியில் சமஸ்கிருதமயமாக்கல் சற்று விரைவாக நடந்தேறத் தொடங்கியது. 
இக்காலக்கட்டத்தில், இந்துக்களின் ஒரு பிரிவினர் கால்டுவெல் பாதிரியாரின் பொய் பிரச்சாரத்தை உண்மை என நம்பி, நாடார்களை (சாணார்களை) இழிந்த சாதியினர் எனவும், அவர்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் தடுத்தனர். இது சம்பந்தமாக வழக்கு ஒன்றும் நாடார்களுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது (OS நம்பர் 88 of 1872). அதே நேரம் ஈரோடு மாவட்டம் பாசூர் எனும் ஊரினை தலைமையிடமாகக் கொண்ட மடாதிபதி அய்யாச்சாமி தீட்சிதர் (பிராமணர்) அவர்கள் கால்டுவெல் பாதிரியாரின் பொய் பிரச்சாரத்தை கடுமையாக எதிர்த்தார். அதுமட்டுமின்றி நாடார்கள் ஸ்ரீலங்காவிலிருந்து இங்கு வந்து குடியேறிய “வந்தேறிகள்” அல்ல என்றும், அதற்கு மாறாக அவர்கள் தமிழகத்தை ஆண்ட பாண்டிய குலத்தை சார்ந்தவர்கள், சத்திரியர்கள் எனவும் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். மடாதிபதியின் சாட்சியத்தை அடிப்படையாக கொண்டு ஆலய பிரவேச தடுப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நாடார்கள் வென்றனர்.

 

இதுபோன்று தோன்றிய கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆலய பிரவேச வழக்கில் (OS 33/1898) நாடார்களுக்காக தில்லைவாழ் (தீட்சிதர்) அந்தணர்களும், பாசூர் அந்தணர்களும் மதுரை சார்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். நாடார்களுக்கு எதிராக நீதிமன்றத்தில், கால்டுவெல் அவர்களின் பிரசுரங்கள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி, நாடார்களுக்காக சாட்சியம் கூறிய தீட்சிதர்களையும், பாசூர் அந்தணர்களையும் கடுமையான அவமதிப்பிற்கு உள்ளாக்கினார். நாடார்கள் தண்டிக்கப்பட்டனர்.

 

நாடார்களுக்கு மட்டுமல்லாமல் தொண்டை மண்டல வெள்ளாள கவுண்டர் சமுதாயம் ஆகியவற்றிற்கும். பாசூர் மடாதிபதியும் அவ்வூர் அந்தணர்களும் 18,19,20ம் நூற்றாண்டில் சமுதாய குருவாக பெரும் சேவை ஆற்றியுள்ளனர். நாடார்களை பொறுத்த அளவில் அவர்களின் ஆன்மீக, வணிக மற்றும் பொது வாழ்விற்கு இவர்கள் பெரும் துணையாய் விளங்கியுள்ளனர். நாடார்கள் வாழும் கிராமங்களை பாசூர் அந்தணர்களின் குடும்பம் ஒவ்வொன்றும் தனதாக்கி (தத்தெடுத்தும்) 5-10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அக்கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு வேதாந்த சைவத்தை எடுத்து விளம்பி, சிவ தீட்சை வழங்கி, பூணூல் அணிவித்து, சத்திரியர்கள் என மீண்டும் அறிவித்து தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கினார்கள். நாடார்கள் வசிக்கும் ஊர்களுக்குள் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிலையை பல்லக்கில் தூக்கி சென்று (அன்றைய ஆலய பிரவேச தடையை முறியடிக்க) வழிபாடு நடத்திட செய்தனர்.
 

சிவதீட்சை பெற்று பூணூல் அணிந்த நாடார்கள் சாதி பெயர் அன்றி சத்திரியர்கள் என பொதுவாக அழைக்கப்பட்டனர். (இதன் காரணமாக பிறந்ததே சத்திரிய வித்தியாசாலைகள்). கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்தமிழகத்தில் சிறு கிராமங்களில் கூட இவ்வாறு பூனூல் அணிந்த நாடார்கள் பலர் காணக்கிடைத்தனர். உதாரணத்திற்கு உமரிக்காடு (உமரிமாநகர்) சாமி நாடார் அவர்களும், அவரது தமையனார்; சத்திரியர் அருணாசல நாடார் அவர்களும் பூணூல் அணிந்திருந்தனர். அதுபோன்று வேதங்களை சமஸ்கிருதத்தில் ஓதவல்ல சிவகாசி நாடார்கள் பலர் இன்றும் உண்டு. (உதாரணம்: சிவகாசி தனபாலன் மோசி குடும்பத்தினர் - ஆண்களும், பெண்களும்).

 

இதன் காரணமாகவே காசிப்பழ நாடார் அவர்கள் 1987ல் எழுதியுள்ள “ உமரிமாநகர் தல வரலாறு” எனும் நூலில் நாடார்களின் குருக்களாக பாசூர் அந்தணர்களை குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் காணலாம். பாசூர் அந்தணர்களைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள விரும்பினால்www.sishri.org, எனும் வலைதளத்திலோ அல்லது விருதுநகர் வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி சரித்திர பேராசிரியை முனைவர். சாரதாதேவி அவர்களின் நாடார்கள் பற்றிய The History of Nadarsஎனும் நூலிலோ படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

 

ஒவ்வொரு நாடார்களும் தங்கள் பிராமணர்கள் போலவே மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். பிராமணர்களைப் போல பஞ்சகஞ்ச வேட்டி முதல் தலையில் குடுமி, பூணூல் வரைக்கும் என்று தங்களை மாற்றிக் கொண்டதுடன் தங்கள் இன மக்களையும் அது போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தங்கள் சங்கங்களின் மூலம் அறிவுறுத்தத் தொடங்கினர். குறிப்பாக சிவகாசி நாடார் இனமக்களின் தலைவராகயிருந்த செண்பககுட்டி நாடார் இதை தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கினர்.

இன்றும் இவ்வாறு பூணூல் அணிந்து சைவ வேதம் கற்று ஓதி வந்த இவர்களின் சந்ததியினர் பூணூல் நாடார்கள் என நாடார்களின் ஒரு பிரிவாக அழைக்கப் படுகின்றனர்!

2 comments:

VILMEENKODI said...

வில்லவர் மற்றும் பாணர்

பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.

இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.

பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

வில்லவர் குலங்கள்

1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்

வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

4. மீனவர்

பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா

1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.

பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.


வில்லவர் பட்டங்கள்

வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

முக்கியத்துவத்தின் ஒழுங்கு

1. சேர இராச்சியம்

வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்

2. பாண்டியன் பேரரசு

வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்

3. சோழப் பேரரசு

வானவர்
வில்லவர்
மலையர்


பாணா மற்றும் மீனா

வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

மஹாபலி

பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.

மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)

பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

ஹிரண்யகர்பா சடங்கு

வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

VILMEENKODI said...

வில்லவர் பாணர்

நாகர்களுக்கு எதிராக போர்

கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.


நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

1. வருணகுலத்தோர்
2. குகன்குலத்தோர்
3. கவுரவகுலத்தோர்
4. பரதவர்
5. களப்பிரர்கள்
6. அஹிச்சத்ரம் நாகர்கள்

இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

கர்நாடகாவின் பாணர்களின் பகை

பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

வில்லவர்களின் முடிவு

1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்

கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

ஆந்திரபிரதேச பாணர்கள்

ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.

பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

பாண வம்சத்தின் கொடிகள்

முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு

பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு